Friday, August 30, 2013

பழந்தமிழரின் அளவை முறைகள்

Photo: பழந்தமிழரின் அளவை முறைகள்...!

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

via சித்தர்கள் இராச்சியம்.



முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


Thursday, August 22, 2013

கம்ப்யூட்டருக்கு புதியவரா? பைல்களின் வகைகள்


.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.

.rtf: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும். 


***.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.


***.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும் பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல் புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட் ஷிட் புரோகிராம் ஒன்றில்தான் இதனைத் திறக்க முடியும். 


.ppt: விண்டோஸின் பிரிமியர் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட் தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும். 


.pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்த வகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபட் ரீடர் உட்பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது


*******htm / html: ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர் புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்க இருமுறை கிளிக் செய்தால், அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத் திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.


.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.


சுருக்கப்பட்ட பைல்கள்: கீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும் பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பைல்களைச் சுருக்கித் தருவதனை File compression என அழைக்கின்றனர். பைல்களின் அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 


.zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அது சுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்ட இணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.


******.rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில ஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். WinRar என்ற புரோகிராம் இந்த பணியை மிக அழகாகச் செய்து முடித்திடும்.


.cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம் ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை கேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர் தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவே இதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.



(நன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்)

Monday, August 5, 2013

துரித உணவு (Fast food )

இன்று துரித உணவு ( fast food ) உண்ணுவது பரவலாக உலகெங்கும் வழக்கில் உள்ளது. இதனால் ஒவ்வாமை(Allergy) உண்டாகலாம் என்பது ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தப் பழக்கம் சிறு பிள்ளைகளிடையே அதிகமாகக் காணப்படுகின்றது.
பல வேளைகளில் சிறு பிள்ளைகளின் தோலில் சிவந்த நிறத்தில் பொறிப் பொறியாக தோன்றி அரிப்பை உண்டுபண்ணும். அல்லது அடிக்கடி சளி பிடிக்கும். கண்கள்கூட சிவந்து வீங்கி வலிக்கும். மருத்துவர் இதை ஒவ்வாமை ( allergy ) என்று சொல்லி மருந்து தருவதுண்டு. சிறு பிள்ளைகளுக்கு ஆஸ்த்மா வியாதியும் அதிக அளவில் பெருகி வருகிறது. இதற்குப் பரம்பரை, மரபணு, சுற்றுச் சூழல் தூய்மையின்மை  என்று பல காரணங்கள் கூறினாலும் உண்ணும் உணவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
       சிறு பிள்ளைகளுக்கு பல காரணங்களால் ஒவ்வாமை உண்டாகலாம்.
வயிற்றுப் புழுக்கள் இருப்பது முக்கியக் காரணமாகலாம் .இதனால்தான் 6 மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து தரப்படுகின்றது.
வயிற்றில் புழுக்கள் எப்படி உருவாகின்றன என்பது பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது. பெரும்பாலானவை உணவு நீர் வழிதான் பரவுகின்றன .உணவைக் கையாளும் உணவகச் சிப்பந்தி அல்லது வீட்டு வேலைக்காரி கழிவறைக்குச் சென்றபின் கையைச் சரிவரச் சோப்புப் போட்டுக்  கழுவாமல் திரும்பி உணவு வகைகளைக் கையாளும்போது அதன் வழியாகப் புழுக்களின் முட்டைகள் உண்ணும் குழந்தையின் வயிற்றினுள் செல்கிறது. அங்கு அவை பெருகி குடல் புழுக்களை உருவாக்குகின்றன.
இரத்தத்தைக் குடித்து இரத்த சோகையை உண்டுபண்ணும் கொக்கிப் புழுக்கள் ( hook worms ) நேரடியாகக்  கால்களின் தோல் வழியாகப் புகுந்து இரத்த ஓட்டம் மூலமாகக் குடலுக்குள் சென்று தஞ்சம் புகுகின்றன. இதனால்தான் வெளியில் செல்லும் போது கட்டாயமாகக்  காலணிகள் அணிந்து செல்ல வேண்டும். கிராமப் புறங்களில் அதிகமாக இரத்தச் சோகை உண்டாவது இதனால்தான்.
இவை அனைத்தும் சுகாதாரமற்ற காரணங்களால் ஏற்படுபவை. இதனால் வயிற்றில் உள்ள புழுக்களில் தோலுக்கு ஒவ்வாமை உண்டாகி குழந்தையில் தோல் சிவந்து அரிப்பு உண்டாகலாம்.
அனால் இப்போது இந்த நவநாகரிகக்  காலத்தில் சுகாதாரம் பேணி வாழும் நிலையிலும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை எவ்வாறு, எதனால் ஏற்படுகிறது என்பதயும் ஆராய்ந்து வருகின்றனர்.
ஒவ்வாமையின் ஒரு பிரிவாகிய ஆஸ்துமா வியாதி பெருகி வருவதற்கு, சுற்றுச் சூழல் மாசு முக்கிய காரணம் எனலாம். குறிப்பாக நகர்ப்புறங்களில் பெருகிவரும் தொழிற்சாலைகளும் வாகனங்களும் அளவுக்கு அதிகமான புகையையும் இரசாயனத்தையும் வெளியேற்றிச் சுற்றுச் சூழலுக்கு சீர்கேடு விளைவிப்பதோடு குழந்தைகளின் உடல் நலத்தையும் கெடுக்கின்றன. நகர்ப்புறங்களில் குழந்தைகள் அதிக அளவில் ஆஸ்த்மா போன்ற நுரையீரல் வியாதிகளால் பாதிக்கப் படுவது இதனால்தான். இதே ஒவ்வாமையால் தோல் வியாதிகளும்கூட உண்டாகின்றன.
இதுவரை சுகாதாரமற்ற பழக்க வழக்கத்தினாலும், சுற்றுச் சூழல் தூய்மையின்மையினாலும் குழந்தைகளின் தோல்கள் பதிக்கப் படுவதைக் கண்டோம்.
இவை தவிர இன்னொரு அதிர்ச்சியூட்டும் காரணமும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது துரித உணவு ( fast food ).இது நாகரீகத்தின் உச்சம் எனலாம். இந்த அவசர உலகில் உண்பதற்கும்கூட அவசர உணவு எளிதில் விற்பனையாகிறது.
அடிக்கடி இந்தத்  துரித உணவை உட்கொள்ளும் குழந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும் ஆஸ்த்மா , ஒவ்வாமை , தோல் அரிப்பு ( eczema ) போன்றவை உண்டாகிறது என்று சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 
இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் இதுதான் காரணம் எனில், உலகளாவிய நிலையில் துரித உணவு உண்ணும் நிலை பெருகி வருவதால் ,இது பொது நல ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது..( The findings could have major public health significance owing to the rising consumption of fast foods globally , if they turn out to be causal .)
இதில் பங்குபெற்ற ஆய்வாளர்கள் சிங்கப்பூர், நியூ ஜீலாந்து , இங்கிலாந்து, ஸ்பெயின் , ஆஸ்திரேலியா , ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆய்வின் பெயர், ” பிள்ளைகளுக்கான ஆஸ்த்மா , ஒவ்வாமை பற்றிய சர்வதேச ஆய்வு ” என்பதாகும்.( International Study of Asthma and Allergies in Childhood )
இதில் 13 முதல் 14 வயதுள்ள 319,000 பிள்ளைகளும் , 6 முதல் 7 வயதுள்ள 181,000 பிள்ளைகளும் கலந்துகொண்டனர்.
இவர்களிடம் உணவு பழக்கவழக்கம் பற்றியும், ஒவ்வாமைத் தொடர்புடைய வியாதிகளான ஆஸ்த்மா, , தோலில் சொறி ,சளி, கண்வலி போன்றவை பற்றியும் கேள்விகள் அடங்கிய ஆய்வுத்தாள் தரப்பட்டது. குழந்தைகளுக்கு பெற்றோர் உதவினர்.குறிப்பாக ஒரு வாரத்தில் தின்ற உணவுவைகள், எத்தனை முறை பழங்கள் காய்கறிகள் உண்டனர், எப்போதெல்லாம் ஹேம்பெர்கர் ( hamburgers ) உட்கொண்டனர் என்று கேட்கப்பட்டது. இவ்வாறு ஆய்வு ஒரு வருடம் நடத்தப்பட்டது.
                                  
                                              பழங்கள் காய்கறிகள்                                                                                                                                  
 39 சதவிகித பெரிய பிள்ளைகளுக்கும், 27 சதவிகித சிறு பிள்ளைகளுக்கும் ஆஸ்த்மா அதிகம் காணப்பட்டது. இவர்கள் வாரத்தில் மூன்று முறையாவது ஹேம்பர்கர் , இதர துரித உணவு உட்கொள்பவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்களுக்குத் தோல் அரிப்பும்,சளி, கண்வலியும் அதிகம் காணப்பட்டது.
                                   ஹேம்பெர்கர் ( hamburgers )
இதற்கு மாறாக, வாரத்தில் மூன்று தடவை பழவகைகளை உட்கொண்ட பிள்ளைகளுக்கு ஆஸ்த்மா, அரிப்பு, சளி , கண்வலி போன்ற ஒவ்வாமை தொடர்புடையவை 11 முதல் 14 சதவிகிதம் குறைவாகக் காணப்பட்டது.
இதன்மூலமாக பழவகைகள் நிறைந்த உணவுவகைகள் ஒவ்வாமைக்கு எதிரான பாதுகாப்பைத் தருவது தெரிய வந்துள்ளது. ( ( Conversely , diets containing fruits , seemed to be protective against allergic disease ,according to the study .)
துரித உணவுகளில் நிறைசெறிவடைந்த கொழுப்புகள் ( saturated fatty acids ) அதிகம் உள்ளதால், அவை உடலின் எதிர்ப்புச் சக்தியை ( immunity ) பாதிக்கின்றன.
ஆனால் பழவகைகளில் ஊயிர் வளியேற்ற எதிர்ப்பிகள் ( antioxidants ) அதிகம் உள்ளதால் அவை உடலின் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகின்றன.
குழந்தைகளையும் பிள்ளைகளையும் ஆஸ்த்மா, தோலில் சொறி சிரங்குகள் 
இல்லாமலும், அடிக்கடி சளி, கண்வலி போன்ற ஒவ்வாமை வியாதிகள் இல்லாமலும் பதுகாக்கவேண்டியது பெற்றோரின் தலையாய  கடமையாகும். 
இதில் முக்கியமானது துரித உணவு வகைகளைக் குறைத்துக் கொண்டு , காய்கறி, பழவகைகளை அதிகம் உட்கொள்ள ஊக்குவிப்பதாகும்.