Wednesday, November 21, 2012

கம்ப்யூட்டருக்கு புதியவரா? - கம்ப்யூட்டர் கிராஷ்


பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில் Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம். 


1. ஹார்ட்வேர் பிரச்னை:

கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் 16 குறைந்த பட்சம் இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு/மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start>Settings> Control Panel> System> Device Manager எனச் சென்று பார்த்தால்,பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும் 

2. ராம் மெமரி சிப்ஸ்:

ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் தீச்டிt ண்tச்tஞு நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம். 

3. ஹார்ட் டிஸ்க் டிரைவ்:

பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் (Defrag)செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.

4. வீடியோ கார்ட்:

சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். Start>Settings>Control Panel> Display Settings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.

5. வைரஸ்:

பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். 

6. பிரிண்டர்:

பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும். 

7. சாப்ட்வேர்:

முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

8. அதிக வெப்பம்:

இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப்படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கு வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.

9. மின் ஓட்டம்:

கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும  சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கலாம்.

நன்றி :தினமலர் கம்ப்யூட்டர் மலர் செய்தி

Thursday, November 15, 2012

உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?







ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அந்தக் காரியத்தில் வெற்றி கிட்டுவது போல் நினைக்க வேண்டும். வெற்றி அடைவது போல் உங்கள் மனத்திரையில் காண வேண்டும். 

  வெற்றி அடைவதைப் போன்று மனதில் உருவகப்படுத்திப் பார்க்கும்போது தோல்வி  அடைந்துவிடுவோம் என்ற எண்ணங்கள் உருவாகுவதற்கு அங்கு வாய்ப்பு இல்லை. 

வெற்றியடைந்து விடுவோம் என்று உங்கள் மனத்தால் நினைக்கும் போது அந்தக் காரியம் வெற்றி அடைந்து விடுவதர்க்குண்டான அணைத்து வழிகளையும் உங்கள் மனது ஏற்படுத்திக் கொடுத்து விடும். 

உங்கள் மனதைச் சந்தோசமாக வைத்திருப்பதற்கு இன்னும் நிறைய வழிகள் உள்ளன.

ஒரு நாளைத் துவக்கும் போது உங்கள் மனதில் சந்தோசமான நிகழ்ச்சிகளை மட்டும் நிரப்பி வையுங்கள்.

அப்படிச் செய்யும் போது அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். அந்த உற்சாகம் அன்று முழுவதும் நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றியடைய உதவுகிறது.

மற்றவர்களிடம் பேசும்போது சந்தோசமான ஆக்க பூர்வமான (positive speech) விசயங்களை மட்டும் பேசுங்கள்.

அந்த இடத்தில ஒரு மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாக்குவதற்குக் காரணமாக இருங்கள். அப்போது மற்றவர்களால் நீங்கள் வெகு சுலபமாகக் கவரப்பட்டுவிடுவீர்கள்.

உங்கள் மனத்திரையில் உங்கள் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளைப் படங்களாக மாட்டி வையுங்கள். அவை தந்த மகிழ்ச்சிகரமான நினைவுகளை அடிக்கடி நினைவு கூர்ந்து உங்கள் காரியங்களில் செயல் படுங்கள். வெற்றியும் கிட்டும். மன அமைதியும் கிட்டும்.

உங்களுடைய அன்றாட வேலைகளைப் போல மனதில் அடிக்கடி சந்தோசமான நிகழ்ச்சிகளை நினைப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

அடிக்கடி உங்கள் மனதில் சந்தோசமான நிகழ்ச்சிகளைச் செலுத்தி கொண்டே இருந்தால் உங்களுக்கு மன அமைதியும் கிட்டும் அதன் விளைவாக உங்களுடைய காரியத்தில் வெற்றியும் கிட்டும்.  

ஒரு காரியம் நடக்காது அல்லது தோல்விதான் என்ற நினைவு வரும்போது உடனடியாக அதற்கு மாற்று மருந்தாக நாம் வெற்றியடையப் போகிறோம் நமக்குச் சாதகமாக  அந்தக் காரியம் நடக்கும் என்று எண்ணுங்கள்.

உடனே அந்தத் தோல்வி எண்ணங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். உங்கள் காரியமும் நிச்சயமாக வெற்றி அடையும்.

எந்தச் சக்தியாலும் உங்களைத் தோல்வி அடையச் செய்ய முடியாது என்று அடிக்கடி எண்ணிக் கொண்டே இருங்கள். உங்களையும் அறியாது உங்கள் மனது எப்போதும் சந்தோசமாகவே இருக்கும்.

என்னதான் நம்முடைய மனதைச் சந்தோசமாக வைத்துகொள்ள நினைத்தாலும் மனம் என்பது ஒரு மாறும் குணமுடைய மனித அங்கமாகும். அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று கூறினார்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்காது. 


தியானம் என்னும் அற்புதக் கலையினால் நம்முடைய மனதை நிலையான ஒரு இடத்தில நிறுத்தி மனதை எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கலாம்  

(இணையத்தில் படித்து ரசித்தது )